தஞ்சையில் வாய்க்காலை காணவில்லை, என கிராம மக்கள் எழுப்பியுள்ள புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் கல்லணையில் இருந்து காவிரி வெண்ணாறு கல்லணைக் கால்வாய் கொள்ளிடம் என 4 ஆறுகளில் பிரித்தெடுக்கப்படுகிறது. பின்னர் அவை 22 ஆயிரம் கிளை ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வாறு கல்லணை கால்வாயில் இருந்து தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை ஊராட்சி கீழவஸ்தாசாவடியில் முதல் தலைப்பு வாய்க்காலாக சவுக்கு குமுழி வாய்க்கால் தெரிகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வாய்க்காலில் 200 மீட்டர் அளவிற்கு வாய்க்காலை காணவில்லை என தற்பொழுது புகார் எழுந்துள்ளது. அப்பகுதி மக்கள் கடந்த 4ஆம் தேதி தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனுவில் சவுக்கு குமிழி வாய்க்காலில் 200 மீட்டர் அளவிற்கு காணவில்லை என கூறியதோடு கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
வாய்க்காலில் குறுக்காக மதில் சுவர் எழுப்பி ஆக்கிரமித்து உள்ளதால் வாய்க்காலில் வரும் தண்ணீர் தேங்கி அப்பகுதியிலுள்ள குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது. ஆனால் ஆக்கிரமிப்பைத் தாண்டி தண்ணீர் செல்லாததால் இந்த வாய்க்காலை நம்பியுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சவுக்கு குமுழி வாய்க்காலை தூர்வாரி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு ஆக்கிரமிப்பை அகற்ற வில்லை என்றால் வருகிற 1 அல்லது 2 ஆம் தேதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.