உப்பிலியப்பன் திருக்கோயிலில் கனகாபிஷேக விழா- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

ராமநவமியை முன்னிட்டு கும்பகோணம் உப்பிலியப்பன் திருக்கோயிலில் கனகாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான கும்பகோணம் உப்பிலியப்பன் வேங்கடாசலபதி திருக்கோயிலில் ராமநவமி பெருவிழா 11…

ராமநவமியை முன்னிட்டு கும்பகோணம் உப்பிலியப்பன் திருக்கோயிலில் கனகாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான கும்பகோணம் உப்பிலியப்பன் வேங்கடாசலபதி திருக்கோயிலில் ராமநவமி பெருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. 10-வது நாளான சனிக்கிழமை கோயில் உள்ள பரிவார தெய்வங்களான ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமனுக்கு பொற்காசுகளால் கனகாபிஷேகம் நடைபெற்றது.

மேலும் உலக மக்களின் நன்மைக்காக சிறப்பு வேள்ளியும்  நடைபெற்று வந்தது . இந் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

—கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.