ஆவடி அருகே அண்ணனுர் பகுதியில் மகளின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அருகே அண்ணனூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜோதி பாஸ். 40 வயதான இவர் மருத்துவ பிரதிநிதியான ரம்யா (37) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் இவரது மகளுக்கு 10 பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். பின்னர் தனது தோழியின் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு ரம்யா அண்ணனூர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து அங்கு வந்த ஆவடி இரும்பு பாதை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், ரம்யாவுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது தெரிய வந்தது. இந்நிலையில் மகளின் பிறந்தநாள் அன்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தனது மகளின் பிறந்தநாளை நல்லபடியாக கொண்டாடிவிட்டு ரம்யா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மகள் பிறந்த நாளன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் பெயரும்
சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







