மாஸ்கோ மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்நகர விமானம் நிலையம் மூடப்பட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அதிபர் புடின் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் கடும் தாக்குத்ல நடத்தியது. இதில் உக்ரைன் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கடும் சேதம் அடைந்தன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோவில் இணைய உக்ரைன் இணைய முன்வந்ததைத் தொடர்ந்து ரஷ்யா போரை தொடங்கியது. இதனிடையே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றன. இதனால் சுமார் 500 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரஷ்யா மீது இன்று அதிகாலை உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் 3 ட்ரோன்கள் மாஸ்கோவை நோக்கி வந்ததாகவும், அதில் ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மற்ற 2 ட்ரோன்கள் முறியடிக்கப்பட்ட நிலையில், சர்வதேச வர்த்தகம் மைய கட்டடம் மீது மோதியாக ரஷ்யா பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. உக்ரைனின் திடீர் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோ விமான நிலையம் மூடப்பட்டது. மேலும் உக்ரைன் மீது எதிர்தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.