காதல் விவகாரத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழப்பு!

காதல் விவகாரத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த மிண்டிகிரி கிராமத்தை சேர்ந்தவர்கள் மகாலிங்கம் – அம்சவேணி தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள்…

காதல் விவகாரத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த மிண்டிகிரி கிராமத்தை சேர்ந்தவர்கள் மகாலிங்கம் – அம்சவேணி தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருந்த நிலையில், மகாலிங்கம் ஓசூரில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். மூத்த மகளான பிரியாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. ஆனால் பிரியாவோ அதே பகுதியில் வசிக்கும் திருப்பதி என்பவரை காதலித்து வந்துள்ளார். திருமண ஏற்பாடுகள் நடந்ததால் அதிர்ச்சியடைந்த பிரியாவும் திருப்பதியும் தங்களது வீடுகளில் இருந்தபடியே விஷம் குடித்து உயிரிழப்பு க்கு முயன்றுள்ளனர். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால் அதன்பிறகுதான் துயரமான சம்பவங்கள் நடந்தன. காதல் விவகாரத்தில் மகள் பிரியா விஷம் குடித்து உயிரிழப்பு க்கு முயன்றதால் தாய் அம்சவேணி மனமுடைந்துள்ளார். இளைய மகள் த்ரிஷா, மகன் விஷ்ணு ஆகியோரோடு உயிரிழப்பு செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டின் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் குதித்துள்ளார். அவ்வாறு குதிக்கும்போது பாறையில் மோதியதில் தாய் அம்சவேணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கிணற்றில் விழுந்த மகன் விஷ்ணு நீச்சல் தெரியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தாய் அம்சவேணி அவரை தண்ணீருக்குள் அழுத்தியுள்ளார். இதனால் மூச்சடைத்து விஷ்ணு உயிரிழந்துள்ளார். பின்னர் இளைய மகள் த்ரிஷாவையும், தாய் அம்சவேணி தண்ணீருக்குள் அழுத்தியுள்ளார். அப்போது அம்சவேணியின் தலையில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தாய் அம்சவேணி, தம்பி விஷ்ணுவின் சடலங்கள் கண்ணெதிரே மிதந்த நிலையில், த்ரிஷா மட்டும் கிணற்றில் உள்ள மோட்டார் பைப்பை பிடித்தபடி இரவு முழுவதும் இருந்துள்ளார். காலையில் அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கிணற்றில் தாயும் மகனும் இறந்து கிடந்ததையும் மற்றொரு மகள் உயிருக்குப் போராடியதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், அம்சவேணி மற்றும் விஷ்ணுவின் சடலங்களை மீட்டனர். த்ரிஷாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதல் விவகாரத்தில் மகள் உயிரிழப்பு க்கு முயன்றதால், மனமுடைந்த தாய், மற்றொரு மகள் மற்றும் மகனுடன் கிணற்றில் குதித்ததும், இதில் தாயும் மகனும் உயிரிழந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.