திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 51.35 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப் பேரவைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தேர்தலில் அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கவும், இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் மார்க்சிஸ்ட் கட்சியும் உள்ளது. இந்த இருகட்சிகளுக்கும் இடையே அங்கு கடும் போட்டி நிலவுகிறது.
காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 13.23 சதவீதம் வாக்குகள் பதிவாகின. காலை 11 மணி நிலவரப்படி 32.12 சதவீத வாக்குகளும், மதியம் 1 மணி நிலவரப்படி 51.35 சதவீத வாக்குகளும் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.