முக்கியச் செய்திகள் தமிழகம்

ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் விலை குறைப்பு

ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் விலை ரூ.50ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் அதிகம் கூடும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டின் விலை ரூ.10ல் இருந்து ரூ.50 ஆக தெற்கு ரயில்வே உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கு மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் டிக்கெட் விலை உயர்வு தொடரும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்போது தொற்று பரவல் குறைந்ததையடுத்து தமிழ்நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டின் விலை ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இந்த விலைக்குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மு.க.ஸ்டாலின் தலைமையில் 100 நாட்கள்; அரசு மேற்கொண்ட திட்டங்கள்

G SaravanaKumar

செல்லப் பிராணிகளுக்கு டும் டும் டும்…! வைரலாகும் வீடியோ

Jayasheeba

“சிலிண்டர் விலையுயர்வு மக்கள் தலையில் விழுந்த பேரிடி” – சீமான்

Halley Karthik