சீர்காழியில் கோலாகலமாக நடந்த பாரம்பரிய நெல் திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 8 ஆம் ஆண்டு நெல் திருவிழா. 500 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப் படுத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் எட்டாம் ஆண்டு…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 8 ஆம் ஆண்டு நெல் திருவிழா. 500 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப் படுத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் எட்டாம் ஆண்டு நெல் திருவிழா நடைபெற்றது. இந்த நெல் திருவிழாவில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் “கதிரேசன்” சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பின் துணைவேந்தர் கதிரேசன், சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இயற்கை வேளாண் வல்லுநர் சித்த மருத்துவர் தஞ்சை கோ. சித்தர் மரபு வழி உணவு வகைகள் குறித்தும், தமிழர் வேளாண்மை குறித்தும் ஞானப்பிரகாசம், தற்சார்பு பற்றி பலகிருட்டிணன் பேசினர்.மேலும், நெல் ரகங்களைப் பயிரிடும் விவசாயிகளுக்காக சம்பா பட்டத்திற்குத் தேவையான பாரம்பரிய நெல் இரக்கங்களான மாப்பிள்ளைச் சம்பா, கருப்பு கவுனி, சீரகசம்பா, கிச்சலி சம்பா, காட்டுயாணம் போன்ற 10 விதமான நெல் இரக்கங்கள் 30 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள ஐந்நூற்றுக்கு மேற்பட்ட மரபு நெல் ரகங்கள் காட்சிப் படுத்தப்பட்டது. மேலும் நஞ்சில்லா உணவு, பலாப் பழ அல்வா, பலாப் பழ ஐஸ் கிரீம், துணி பை, சித்த மருத்துவம், அரிய வகை மூலிகை, பாரம்பரிய தானிய தின்பண்டங்கள் , ஆகியவையும் காட்சியில் வைக்கப்பட்டது.

இயற்கை விவசாயத்திற்குத் தேவையான அனைத்து ஆலோசனை வழிமுறைகளையும் விவசாயிகளுக்கு வழங்கினர். விழாவில் நாட்டுக் காய்கறி விதைகள் விற்பனையும் நடைபெற்றது. மேலும் விழாவில் பங்கேற்றவர்களுக்குப் பாரம்பரிய அரிசியில் செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.