உதகையில் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆயுதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.







