முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

சென்னையில் 82 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை : அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு..!

சென்னையில் இன்று முதல் 82 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி ஆகும். இந்த காய்கறிகள் இல்லாமல் சமையல் செய்வதே மிக மிக கடினம். தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை ஏறினால் பொதுமக்கள் மற்றும் ஓட்டல் தொழிலில் ஈடுபடுவோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது 130 ரூபாயை தொட்டுள்ளது. தக்காளி விலை கிலோ ரூ.130 வரை உயர்ந்து விட்டதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் இன்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை அதிகரிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டது. ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பது குறித்த கருத்துகள் பெறப்பட்டுள்ள நிலையில், அது சாத்தியமா? நடைமுறைச் சிக்கல்கள் என்ன? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

சென்னையில் தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் “ தக்காளி விளைச்சல் குறைந்ததால் பத்து நாட்களுக்கு விலை அதிகரித்து காணப்படும் என்று கூறினார். மேலும் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யும் நடவடிக்கையை அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். அதன்படி இன்று முதல் 82 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

திருமண மேடையிலேயே ரீல்ஸ் வீடியோ தயாரித்த மணமகன்!

Web Editor

நெல்லையப்பர் கோயிலில் பவித்ர உற்சவ திருவிழா

Gayathri Venkatesan

ஆன்லைன் சூதாட்ட தடை: அவசர சட்டம் பிறப்பிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading