பிரதமர் மோடி தலைமையில்  இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு

பிரதமர் மோடி தலைமையில்  ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.  கடந்த 2001ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) தொடங்கப்பட்டது. இதில்  ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஜஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய…

பிரதமர் மோடி தலைமையில்  ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. 
கடந்த 2001ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) தொடங்கப்பட்டது. இதில்  ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஜஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.  2017-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டன. இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் பகுதியில்  ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி, மெய்நிகர் காட்சி வழியே இன்று நடத்துகிறது. இந்தியா முதன்முறையாக தலைமையேற்று நடத்தும் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோரும், மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்த பல தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம், பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சீனா மற்றும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.