இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னை பாராட்டும் அளவிற்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
45 ஆண்டுகள் தமிழ் சினிமா உலகில் நிறைவு செய்த இயக்குனர் பாரதி ராஜாவுக்கு பாராட்டு விழா மற்றும் தமிழ் சினிமா திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், தமிழ் சினிமா திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பாரதி ராஜாவுக்கு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா, சமீபகாலமக உடல் நல குறைவால் நிறைய நிகழ்வில் கலந்து கொள்ள மனதோ, உடலோ சம்மதிக்கவில்லை, இருப்பினும் பத்திரிகையாளர் மீதுள்ள அன்பினால் இன்று கலந்து கொண்டேன் என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டெல்லி முதல் பல மேடையை பார்த்து உள்ளேன். ஆனால் இன்று பத்திரிகையாளர்கள் எனக்கு நடத்தும் இந்த நிகழ்வு மிகவும் நெருக்கமான ஒன்று. ஒரு சமயம் ஒரு பத்திரிகை என்னை குறைத்து மதிப்பிட்டு எழுதிய போது அதனுடைய ஆசிரியரை நேரில் போய் சென்று சந்தித்து திட்டிவிட்டேன், ஆனால் தற்பொழுது 4 தலைமுறை ஊடகத்தை பார்க்கிறேன், இந்த தலைமுறை ஊடக சூழல் மிகவும் நட்பாக மாறி உள்ளது. மேலும் இயக்குனர் லோகேஷ் சின்ன பையன், ஆனால் சாதனையில் பெரிய பையன். ஊடகத்தை நேசித்து பெரிய கனவுடன் வந்து உள்ளான். அவரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது என்று தெரிவித்தார்.
கமல் ஒரு சிறந்த நடிகன். சினிமாவிற்காக தன்னை அர்பணித்து கொண்டவன் என கூறினார். கமல் மற்றும் ரஜினியை ஒன்றாக சேர்த்து ஒரு விழா நடத்த வேண்டும் என்று ஆசையாக உள்ளது என கூறினார். அது மட்டுமின்றி ரஜினி உடன் நடந்த அனுபவத்தில்16 வயது படப்பிடிப்பில் நான் மற்றும் ரஜினி ஹோட்டல் வராண்டாவில் படுத்து இருந்தோம். அந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் வேலை செய்த காலம் என்று நெகிழ்ச்சியாக பேசினார்.
தமிழ் சினிமா உலகில் நான் 55 வயதில் பல ஜென்மம் எடுத்து உள்ளேன். சப்பாணியகவும் வாழ்ந்து உள்ளேன், ஶ்ரீதேவியாகவும் வாழ்ந்து உள்ளேன் என்றார். தற்போது நான் 2 படங்கள் இயக்கி கொண்டு வருகிறேன் என்ற அவர், 4 படங்களில் நடித்து வருகிறேன் என்றார். இருப்பினும் லோகேஷ் உடன் போட்டி போட்டு படம் எடுக்க வேண்டும் என ஆசையாக உள்ளது என்றார். இயக்குனர் லோகேஷ் என்னை பாராட்டும் அளவிற்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்றும் இயக்குநர் இமயம் பாரதிராஜா தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்