வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக நல்ல முடிவு எடுக்கப்படும்: முதலமைச்சர்

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய பாமக…

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், தனக்கு இடஒதுக்கீடு தொடர்பாக கடிதம் ஒன்றினை அனுப்பியதாக தெரிவித்தார். அந்த கடிதத்தில் 10.5 சதவீத விழுக்காடு இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி உள்ளார்.

மேலும், இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வழிகாட்டுதல் மற்றும் அரசாணையை வழங்க வேண்டும் என கடிதத்தில் கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போதுதான் அரசு மூச்சுவிட ஆரம்பித்துள்ளதாகவும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.