ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இன்று காலையில் தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏழுமலையான் அருள்பாலித்து வருகிறார். ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதிலும் இருந்து அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பக்தர்களாக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலையில் திருப்பதிக்கு வருகை தந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஏழுமலையானை தரிசித்தார். அதிகாலை வேளையில் கோயிலில் நடைபெற்ற சுப்ரபாதத்தில் கலந்து கொண்ட அவர் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவருக்கு தேவஸ்தானம் சார்பில் ரங்கராயர் மண்டபத்தில் வைத்து தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி உள்ளிட்டவை அளிக்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேந்தன்