நடிகை ராஷ்மிகா சமூக வலைதளங்களில் தன்னை பற்றி ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்து உள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமடைந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படம் மூலம் தமிழில் நடிகை ராஷ்மிகா கதாநாயகியாக களமிறங்கினார். சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதாராமம் திரைப்படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அடுத்தடுத்து ஹிந்தியில் அனிமல், மிஷின் மஞ்சு மற்றும் தெலுங்கில் புஷ்பா 2 ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன் மீது கொட்டப்படும் மோசமான எதிர்மறை விமர்சனங்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்படுவதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டுள்ளார். அதில், கடந்த சில நாட்களாக, மாதங்களாக அல்லது சில வருடங்களாக சில ட்ரோல்கள் என்னை தொந்தரவு செய்து வருகின்றன. இதை நான் எனக்காக மட்டுமே பேசுகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பே நான் இதை செய்திருக்க வேண்டும்.
நான் தேர்ந்தெடுத்துள்ள இந்த வாழ்க்கையில், நான் எல்லோருக்கம் பிடித்தமானவளாக இருக்க வேண்டும் என்பது இல்லை. அனைவரும் என்னை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. அதேநேரத்தில் உங்களுக்கு என்னை பிடிக்காவிட்டால் நெகட்டிவிட்டியை பரப்பலாம் என்று அர்த்தமல்ல. உங்கள் அனைவரையும் மகிழ்விப்பதற்காக எந்த வகையான கடினமாக பணிகளை மேற்கொள்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். எனது படங்களின் மலம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே நான் மிகவும் அக்கறை காட்டுகிறேன்.
என் வேலையின் மூலம் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியை மட்டுமே நான்கவனிக்கிறேன். உங்களைப் பெருமைப்படுத்த என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். நான் சொல்லாத விஷயங்களைப் பற்றி மக்கள் இணையத்தில் கேவலமான கருத்துகளை வெளியிடுவது மனவேதனை அளிக்கிறது. மிகவும் வெறுப்பாக இருக்கிறது. நான் சொன்ன சில விஷயங்கள் எனக்கு எதிராக மாறுவதையும் கண்டேன். என்னைப் பொறுத்தவரை, இணையத்தில் பரப்பப்படும் சில பொய்யான கதைகள், தொழில்துறையில் அல்லது வெளியில் உள்ள எனது உறவுகளை தொந்தரவு செய்கின்றன.
நீண்ட காலமாக நான் இதனை புறக்கணித்த நிலையில் தற்போது அது எல்லை மீறி சென்றுவிட்டது. உங்களை வெல்வதற்காக இதனை நான் எடுத்துரைக்கவில்லை. தொடர்ந்து பெறும் பெறுப்பின் காரணமாக இதனை தற்போது சொல்ரல வேண்டிய கட்டாயத்டிதல் இருக்கிறேன். உங்களின் நிலையான அன்பும், ஆதரவும் தான் என்னை இந்த துறையில் தொடர வைத்தது. தற்போது மனதை விட்டு சமூக வலைத்தளத்தில் வந்து இதைச்சொல்ல எனக்கு தைரியத்தை கொடுத்தது.
என்னை சுற்றியுள்ள அனைவரிடமும், இதுவரை நான் பணியாற்றியவர்களிடமும், நான் எப்போதம் ரசித்த அனைவரிடமும் நான் அன்பை மட்டுமே செலுத்துகிறேன். தொடர்ந்து கடினமாக உழைத்து உங்களுக்கான சிறப்பான படங்களை செய்வேன். ஏனென்றால் ஏற்கனவே நான் சொன்னது போல, உங்களை மகிழ்விப்பது தான், எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லோரும் அன்பாக இருங்கள், நாங்கள் அனைவரும் எங்களால் முடிந்ததை செய்ய முயற்சிக்கிறோம் என கூறியுள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் இந்த பதிவிற்கு நடிகர் துல்கர் சல்மான், ஹன்சிகா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.