தமிழகம் பக்தி

திருச்செந்தூர் திருக்கோயிலின் மாசி திருவிழா – ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மாசி திருவிழா மூன்றாம் நாளான நேன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைப்பெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மாசித் திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறக்கூடிய இத் திருவிழாவில் நாள்தோறும் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் 3-ம் திருநாளான நேன்று மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமாள் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை
அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும், எழுந்தருளி எட்டு திருவீதிகளிலும் உலா வந்துப் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமை தொகை திட்டம்!

Jayasheeba

திருமணத்தில் குவிந்த 250 பேர்: 100 பேருக்கு கொரோனா, மாமனார் உட்பட 4 பேர் பரிதாப பலி!

Halley Karthik

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 45 கூடுதல் பறக்கும் படை

G SaravanaKumar