25 C
Chennai
December 4, 2023
தமிழகம் செய்திகள் விளையாட்டு

திருப்பூரில் புறா பந்தயம் – பரிசுகளை அள்ளிச் சென்ற உரிமையாளர்கள்!

திருப்பூரில் நடத்தப்பட்ட புறா பந்தயத்தில் நீண்ட நேரம் சிறகடித்து பறந்த புறாக்களுக்கு பரிசுக் கோப்பையுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

புறாக்கள் நெடு தூரம் வரை பறக்கும் திறனுடையது என்பதால், அவைகள் கடிதப்போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கு  பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த சூழலில் அதன் நீட்சியாக தற்போது இவ்வகை புறாக்கள் நன்கு பயிற்சி கொடுக்கப்பட்டு புறா பந்தயத்திற்காக பயன்படுத்தப்பட்டு
வருகின்றன. இந்த பந்தயத்திற்காக பழக்கப்பட்ட புறாக்கள் வெகுதொலைவில்
கொண்டுவிடப்பட்டு அவைகள் தங்கள் கூட்டுக்குத் திரும்பி வரும் நேரத்தை கணக்கிட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கோவை, தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்றளவும் இந்த புறா பந்தயங்கள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திலும் புறா பந்தயம் நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்ட புறா கலை வளர்ப்பு சங்கம் சார்பில் நடத்தப்பட்ட புறா பந்தயத்தில் 9 புறாக்கள் கலந்து கொண்டன. திருப்பூர் ரயில் நிலையம், தென்னம்பாளையம் , பெருச்சிபாளையம் உள்ளிட்ட இடங்களில் புறா பந்தயமானது நடத்தப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் கலந்து கொண்ட புறாக்கள் தங்கள் இருப்பிட பகுதிக்குச் சென்று கீழே இறங்காமல் தொடர்ந்து பறந்து கொண்டிருக்க வேண்டும். எந்த புறாக்கள் கீழே இறங்காமல் அதிக நேரம் பறக்கிறது என்ற நேரத்தை கணக்கிட்டு பரிசுகள் அறிவிக்கப்படும். இந்த போட்டியில் வெற்றி பெற்ற புறாக்களுக்கு சான்றிதழ்களும் புறா உரிமையாளர்களுக்கு பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy