என்னை கருப்பு எம்.ஜி.ஆர் என்கிறார்கள்… அவர்களை இதயத்தில் வைத்து கொள்வேன் -நடிகர் ராகவா லாரன்ஸ்

என்னை கருப்பு எம்.ஜி.ஆர் என்றும்,  அன்னை தெரசா என்றும் சொல்கிறார்கள் என்று கூறுவது பெருமையாக இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். மாற்றம் அறக்கட்டளை மூலம் கோவை தொண்டாமுத்தூர் பகுதி தேவராயபுரம் கிராமத்திற்கு நடிகர்…

என்னை கருப்பு எம்.ஜி.ஆர் என்றும்,  அன்னை தெரசா என்றும்
சொல்கிறார்கள் என்று கூறுவது பெருமையாக இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

மாற்றம் அறக்கட்டளை மூலம் கோவை தொண்டாமுத்தூர் பகுதி தேவராயபுரம்
கிராமத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் விவசாயம் செய்ய டிராக்டர் வழங்கினார்.
ஊர் மக்கள் அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து கருப்பு
எம்.ஜி.ஆர் அன கோஷமிட்டனர்.

அப்போது மேடையில் பேசிய அவர்,  நான் செய்யும் இந்த சேவை மூலம் அனைவருக்குச் சேவை எண்ணம் தோன்றினால் போதும்.  என்னைக் கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லிக் கோர்த்து விடாதீர்கள் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ்,  நான் செல்லும் இடத்தில் சில பேர் என்னை,  அன்னை தெரசா,  எம்.ஜி.ஆர் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் இதயத்தில் வைத்து கொள்வேன். தலையில் வைத்துக் கொள்ளமாட்டேன்.

விவசாயம் வளர வேண்டும். ஏழை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில்
செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.  மேலும் எங்களுடன் இணைந்து பணியாற்றி சேவை செய்பவர்கள் எங்கள் அறக்கட்டளையைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.