உத்தரகாண்ட்டில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயில், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய கோயில்களின் நடை இன்று திறக்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோயில்களும் சார்தாம் என்று அழைக்கப்படுகிறது. இமயமலையில் அமைந்துள்ள இந்த கோயில்கள் ஆண்டுதோறும் பக்தர்களின் தரிசனத்துக்கான 6 மாதங்கள் திறக்கப்படுவது வழக்கம். பின்னர் குளிர்காலம் தொடங்கும்போது கோயில்களின் நடை மூடப்படும்.
அந்த வகையில், கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் ஆகிய மூன்று கோயில்களின் நடை இன்று திறக்கப்பட்டது. கேதார்நாத் கோயில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயிலின் நடையை திறக்கும் போது “ஹர ஹர மகாதேவ்” என்ற பக்தர்கள் பரவசத்துடன் கோஷமிட்டனர். மீதமுள்ள பத்ரிநாத் கோயில் மே 12 அன்று பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது.







