இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டில் ஷர்துல் தாகூர் அதிரடியாக சாதனை படைத்ததை அடுத்து, இந்திய வீரர்கள் அவரை ’பீஃபி’ என்று கிண்டலடிப்பதாக ஷர்துல் தெரிவித்தார்
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 2) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை
தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. கேப்டன் விராத் கோலி தவிர அனைத்துவீரர்கள் அவசரத்தில் வெளியேற, களமிறங்கினார் ஷர்துல் தாகூர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிரடியாக ஆடிய அவர் இந்திய அணி, கவுரமான ஸ்கோரை எட்ட வழி வகுத்தார். 31 பந்து களில் அரைசதம் விளாசிய ஷர்துல், தனது பங்குக்கு 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை ஷர்துல் தாகூர் படைத்தார். இதற்கு முன்பு இங்கிலாந்தின் இயான் போத்தம் 1986 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இதே மைதானத்தில் 32 பந்தில் அரை சதம் எடுத்ததே சாதனையாக இருந்தது.
இதையடுத்து ஷர்துல் தாகூர் கூறும்போது, ’இயான் போத்தம் சாதனையை முறியடித்தது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அணிக்காக முக்கியமான ரன்களை குவிப்பது எப்போதும் நல்லது என நினைக்கிறேன். டிரெஸ்சிங் ரூமில் சக வீரர்கள் பீஃபி (Beefy- இயான் போத்தமின் செல்லப் பெயர்) என்று கலாய்க்கிறார்கள். முக்கியமான விளையாட்டு வீரர்களுடன் ஒப்பிடு வது ஒருவகையில் நல்லது தான் என்றார் ஷர்துல் தாகூர்.