தென்காசி மாவட்ட கவுன்சிலர் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் காது கொடுத்து கூட கேட்பதில்லை என மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் உறுப்பினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், நடைபெற்ற மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில், மொத்தம் உள்ள 14 உறுப்பினர்களில் 12 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், கூட்டத்தின் ஆரம்பத்தில் 11 மன்ற பொருள்கள் முன்வைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, பல்வேறு விவாதங்கள் மன்ற பொருள்கள் மீது காரசாரமாக நடைபெற்ற நிலையில், 2-வது வார்டு மாவட்ட கவுன்சிலரான மதி மாரிமுத்து என்பவர் எழுந்து
மக்கள் பிரதிநிதிகளான தங்களின் குறைகளை அரசு அதிகாரிகள் காதுகொடுத்து கேட்க கூட முன் வருவதில்லை எனவும், மக்கள் பிரதிநிதிகள் அதிகாரங்கள் அனைத்தும் அதிகாரிகளே முழுமையாக எடுத்துக்கொண்டு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து அவர்களிடம் கேள்வி கேட்டால் எந்தவிதமான பதிலும் சொல்லாமல் அலைக்கழிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி
அலுவலர்களும் பங்கேற்க வேண்டும் என்ற விதி உள்ள சூழலில் மூன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மட்டும் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் பங்கேற்பதால் மற்ற பகுதியில் உள்ள குறைகளை அவர்களிடம் தெரிவிக்க முடியாமலே போகின்றன.
இதன் காரணமாக மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்த முடியாமல் கிடப்பிலேயே உள்ளன என வேதனைத் தெரிவித்தார். அதற்கு பதிலளிக்க முடியாமல் தினறிய உதவி இயக்குநர் இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.
-ரெ.வீரம்மாதேவி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்