ராமர் கோயில் நன்கொடை திருட்டு: யோகி ஆதித்யநாத் , பாஜக மீது மாணிக்கம் தாகூர் சாடல்…!

பக்தர்களின் நம்பிக்கையையும், பணத்தையும் சுரண்டிய பாஜகவின் முகமூடி கிழிந்துவிட்டதாக தமிழ் நாடு காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயிலில் நன்கொடைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பக்தர்களின் நம்பிக்கையைப் புண்படுத்தியுள்ளதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று கூறினார். மேலும் அவர் அயோத்தியையும் ராம ஜன்மபூமியையும் அவதூறு செய்ய எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சி நியாயமற்றது என்றும் கூறினார்.

இந்த நிலையில் தமிழ் நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

“கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்பது போல, ராமர் கோவில் உண்டியல் திருட்டை இப்போது ஒப்புக்கொள்கிறார் யோகி ஆதித்யநாத்.

பக்தர்களின் நம்பிக்கையையும், பணத்தையும் சுரண்டிய பாசிச பாஜகவின் முகமூடி கிழிந்துவிட்டது.

கடவுள் பெயரால் கல்லா கட்டிய உங்களின் ஊழல் நாடகத்திற்கு, வரும் 2029 தேர்தலில் மக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயி​லில் காணிக்கை திருடப்​பட்​ட​தாக​வும் நன்கொடை வசூலித்​த​தில் முறை​கேடு நடந்​த​தாக​வும் புகார் எழுந்துள்​ளது. இதுகுறித்து விசா​ரிக்க சிறப்பு விசா​ரணைக் குழு (எஸ்​ஐடி) அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த வழக்​கில் இது​வரை 8 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.