ஜிபிஎஸ் கருவி பொருத்திய பைக் திருட்டு; கண்டுபிடிக்க முடியாதது எதனால்?

திருடினால் சுலபமாக கண்டுபிடிக்க GPS கருவி, விலை உயர்ந்த பைக்கில் பொருத்திய ஐடி நிறுவன ஊழியரிடமே மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தொடரும் பைக் திருட்டு சம்பவங்களுக்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்குமா? அது குறித்து இந்த…

திருடினால் சுலபமாக கண்டுபிடிக்க GPS கருவி, விலை உயர்ந்த பைக்கில் பொருத்திய ஐடி நிறுவன ஊழியரிடமே மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தொடரும் பைக் திருட்டு சம்பவங்களுக்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்குமா? அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

 

இரு சக்கர வாகனம் திருடு போனால், அதை கண்டுபிடிக்க, வாகன உரிமையாளர்கள், அதனுள்ளேயே Gps கருவி பொறுத்தி வைக்கின்றனர். அதன் மூலம் திருடுபோகும் இரு சக்கர வாகனங்களை, காவல்துறை உதவியுடனோ அல்லது தாமாகவே கண்டுபிடித்து விடுலாம் என்று நம்புகின்றனர். சமீபத்தில் Gps கருவி பொறுத்தப்பட்ட விலை உயர்ந்த பைக் ஒன்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த வாகன உரிமையாளர் பின்தொடர்ந்து சென்று பிடிக்க முயன்றுள்ளார்.

 

ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் தப்பிசென்றதால், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. அவர் பெயர் பரத் குமார். சென்னை கொளத்தூர் துளசி நகரில் வசித்து வரும் இவர், ஐடி நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புடைய விலை உயர்ந்த பைக் ஒன்றை கடந்த 2019- ஆண்டு வாங்கியுள்ளார். பைக் திருடு போனால் கண்டுபிடிப்பதற்காக அதனுள் Gps கருவி பொறுத்தியுள்ளார். ஆனால் அந்த வாகனத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். கண்டுபிடிக்க முடியாமல் போனது எதனால் என்பதனை பாதிக்கப்பட்ட பரத்குமாரே விவரிக்கிறார்.

இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள் குறித்து பரத்குமார் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்ற கொளத்தூர் போலீசார் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை புகார் கொடுத்த பரத் குமாரே பார்த்துள்ளார். சிசிடிவி காட்சியில், 18-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் திருடி செல்லும் காட்சி தெளிவாக பதிவாகி இருந்தது.

 

பரத் குமார் வசித்து வரும் பகுதியிலேயே தொடர்ந்து இருசக்கரவாகனம் திருடு போவதாகவும், காவல்துறையினர் முறையாக ரோந்து பணியில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கடந்த 10 நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடப்பட்டு இருப்பதாகவும், இதுவரை திருடப்பட்ட வாகனங்கள் ஒன்று கூட கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அந்த பகுதிமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். கொளத்தூர் காவல்துறையினர் விரைந்து விசாரணை நடத்தி பைக் திருடர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர்.

 

– சீனிவாசன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.