புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிஉரை நிகழ்த்துவார். சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு, அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மேலும், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. அதனுடன், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வது குறித்தும், புதிய தொழில் கொள்கைகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படது. இதேபோன்று, தமிழக அரசின் திட்டங்கள் மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு, சட்டமன்றத்தில் தரவுகளுடன் பதிலளிக்கும் வகையில் கருத்துகளை எடுத்துரைப்பது குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.