‘விடாமுயற்சி’ படத்தை விடாமல் தொடரும் பிரச்னைகள்!

அஜித்தின் ’விடாமுயற்சி’ திரைப்படம் அக். 4-ம் தேதி துவங்கிய நிலையில், படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தமுடியாதபடி மீண்டும் ஒரு பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில்…

அஜித்தின் ’விடாமுயற்சி’ திரைப்படம் அக். 4-ம் தேதி துவங்கிய நிலையில், படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தமுடியாதபடி மீண்டும் ஒரு பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையே, ஐரோப்பாவில் பைக் டூர் சென்ற அஜித்குமார் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இதுகுறித்த வீடியோக்களும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களும் வைரலாகின.

சமீபத்தில் நடைபெற்ற சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுபாஸ்கரனிடமே பத்திரிகையாளர்கள் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் நிலவரம் குறித்து கேட்டதில், விரைவில் விடாமுயற்சி ஆரம்பமாகும் என அறிவித்து அஜித் ரசிகர்களை ஹேப்பியாக்கினார்.

இப்படியான சூழ்நிலையில்,  சந்திரமுகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லைக்கா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கலந்துகொண்டு, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படுவதாகவும் தங்களுக்கு இப்படம் முக்கியமானது என்றும் கூறியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் அபுதாபியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

இதையும் படியுங்கள் : பிக் பாஸ் 7: ”நீங்க லவ்வர்ஸ் தானே.. சந்தேகமா இருக்கு” – விசித்ராவிடம் உண்மையை சொன்ன மணி – ரவீனா!

இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு முக்கிய வில்லனாக சஞ்சய் தத்தும் மற்றொரு வில்லனாக நடிகர் ஆரவ்வும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்த ஆரவ் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைதொடர்ந்து இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, அபுதாபியில் கடந்த அக். 4ம் தேதி தொடங்கியது.

இதற்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றுள்ளனர். படப்பிடிப்பு துவங்கி இன்னும் பத்து நாள் கூட ஆகாத நிலையில் தற்போது இஸ்ரேல் நாட்டில், போர் நடந்து வருவதால், இந்த போரின் தாக்கம் துபாய், அஜர்பைஜான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. அதனால் அந்நாட்டு அரசாங்கம், விமான போக்குவரத்துக்கு போன்ற விஷயங்களை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தங்களுடைய நாட்டுக்கு வந்திருக்கும் பயணிகளுக்கும் சில எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாம். இதனால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த தகவலால் தான் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் டென்க்ஷனில் உள்ளதாக கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள News7 Tamil – ன் WhatsApp Channel– ல் இணைய – க்ளிக் செய்யுங்கள்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.