சென்னையில் 45வது புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், கண்காட்சி நடைபெரும் இடத்தில் எட்டு பாதைகள் அமைக்கப்பட்டு , ஒவ்வொரு பாதைக்கும் தனித்தனி பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கவிருந்த புத்தக கண்காட்சி கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. புத்தக கண்காட்சி நடைபெற அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து , கடந்த 16ம் தேதியில் இருந்து புத்தக கண்காட்சி நடைபெற்று வருகின்றது.
காலையில் தொடங்கி இரவு 8 மணிவரை நடக்கும் புத்தக கண்காட்சியில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொது மக்கள் என எல்லோரும் ஆர்வமாக கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் புத்தக கண்காட்சியில் எட்டு பாதைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு பாதைக்கும் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. அதன் விபரம்,
1.சக்தி வை. கோவிந்தன் – சக்தி காரியாலயம், 2.சின்ன அண்ணாமலை – தமிழ்ப்பண்ணை,3.முல்லை முத்தையா – முல்லை பதிப்பகம், 4.முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி, 5. அல்லயன்ஸ் கம்பெனி – குப்புசாமி, 6. சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் – வ. சுப்பையா, 7.படைப்பாளர் கி. ராஜநாராயணன், 8.படைப்பாளர் தொ. பரமசிவம் என எழுத்தாளர்கள் பெயர்களில் ஒவ்வொரு பாதைக்கும் பெயரிடப்பட்டுள்ளது. பாதைகள் அமைத்து அதற்கு எழுத்தாளர்களின் பெயர்களை வைத்திருப்பது வாசகர்களனின் கருத்தை கவரும் வகையில் உள்ளது.