தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 23-ம் தேதியில் இருந்து ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 743 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  …

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 23-ம் தேதியில் இருந்து ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 743 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. முதல் அலை, இரண்டாம் அலை பாதிப்பை தொடர்ந்து தற்போது மூன்றாவது அலையை நோக்கி நகர்ந்து கொண்டு செல்கிறது. ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் பரவி வரும் கொரோனா பாதிப்பு, நாளுக்கு நாள் வேகமெடுத்து செல்கிறது. குறிப்பாக மேற்வங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கிய நிலையில், மாநில அரசுகளும் பாதிப்பை வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில்,
தமிழ்நாட்டில் ஜூன் மாதம் முதல் தினசரி கொரோனா பாதிப்பு உயரத் தொடங்கியது. தமிழ்நாட்டில் 200-க்கும் குறைவாக இருந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 23 ஆம் தேதி 1,000 ஐ தண்டியது. இப்படி படிப்படியாக அதிகரித்து நேற்று ஒரேநாளில் 2,662 பேர் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

 

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,743 ஆக அதிகரித்து இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,90,834 ஆக அதிகரித்து இருக்கிறது என தெரிவித்துள்ளது.

 

சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1,062 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 3 வாரங்களில் முதல்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இன்று யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவித்துள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,027 ஆக அதிகரித்து உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

 

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 403 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17,717 ஆக அதிகரித்து இருக்கிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 1,791 பேர் இன்று குணமடைந்து இருக்கின்றனர். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,35,090 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.