தி கேரளா ஸ்டோரி திரைப்பட விவகாரம்; கோவையில் அனைத்து காட்சிகளும் ரத்து!

கோவையில் திரையிடப்பட்ட தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி…

கோவையில் திரையிடப்பட்ட தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ நேற்று வெளியானது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண்களின்” பின்னணியில் உள்ள நிகழ்வுகளை “கண்டுபிடிப்பதாக” இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தடை செய்ய  உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது.

இந்த நிலையில், நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த ‘லவ் ஜிகாத்’ பிரச்னையை எழுப்புவதன் மூலம் மாநிலத்தை மத தீவிரவாதத்தின் மையமாக சித்தரிக்க சங்பரிவார் அமைப்புகள் பிரசாரத்தை கையிலெடுத்துள்ளது என, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தயாரிப்பாளர்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடினார்.

சென்னையில் 15 இடங்களில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாவதை ஒட்டி 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னையில் திருமங்கலம் வி.ஆர் மால், ராயப்பேட்டை மால், சத்தியம் திரையரங்கம்  உட்பட 6 திரையரங்குகளை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்த நிலையில், கோவையில் திரையிடப்பட்ட தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தி கேரளா ஸ்டோரி திரைபடம் கோவையில் உள்ள மூன்று வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டது. ஆயிரம் போலீசார் பாதுகாப்புடன் திரையிடப்பட்டு வந்த நிலையில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.