ஆளுநர் உரைக்கு எதிர்ப்பல்ல; ஆளுநருக்கே எதிர்ப்பு: விசிக வெளிநடப்பு

நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து விசிக வெளிநடப்பு செய்துள்ளது. இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், விசிக…

நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து விசிக வெளிநடப்பு செய்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், விசிக சட்டமன்றக் குழுத் தலைவர் சிந்தனைச்செல்வன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

அனைத்துக் கட்சிகளும் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றிய நீட் தேர்வுக்கு வி்லக்குகோரும் மசோதா ஆளுநர் அலுவலகத்தில் இன்னும் கிடப்பில் கிடக்கிறது. இது வாக்களித்த மக்களுக்கு செய்யக்கூடிய துரோகம் என்பதை விசிக சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்று தெரிவித்தார். மேலும், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு அல்ல; ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் தீர்மானிக்கப்படும் சட்ட முன் வடிவுகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. மேலும், அரசியல் கொள்கை முடிவுகளில் ஆளுநர் தலையிடக்கூடாது என்பதை அரசியல் சாசனம் சுட்டிக்காட்டியுள்ளது என சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.