தடுப்பூசி குறித்த தவறான பிரச்சாரம் எதுவும் வெற்றி பெறவில்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கேட்டுக்கொண்டார்.
நாளை மாநிலங்கள் முழுவதும் கொரோனா தடுப்பூசி சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ள நிலையில் அனைத்து மாநில சுகாதரா அமைச்சர்கள் மற்றம் சுகதாரத்துறை அதிகாரிகளுடன் காணொலி மூலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தல் பேசிய அவர், நாளை 33 மாநிலங்கள் மற்றும் மத்திய பிரதேசங்களில் தடுப்பூசி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மகாராஷ்டிரா, கேரளா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை சமீபத்தில் கொரோனா வைரஸ் வழக்குகளில் திடீரென அதிகரித்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறந்துவிடக் கூடாது, COVID19 க்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டும் என்ற எச்சரிக்கையை இது தருவதாகவும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசினார். தடுப்பூசி குறித்த தவறான பிரச்சாரம் எதுவும் வெற்றிபெறவில்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.