கரூரில் 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

கரூரில் இரண்டு நாட்களாக நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை அதிகாலை 2 மணியளவில் நிறைவு பெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் “இளந்தளிர்…

கரூரில் இரண்டு நாட்களாக நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை அதிகாலை 2 மணியளவில் நிறைவு பெற்றது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர்
செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் “இளந்தளிர் பைனான்ஸ்”
அலுவலகம் மற்றும் அம்பாள் நகரில் உள்ள அவரது வீடு ஆகிய இரண்டு இடங்களில்
நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 3) காலை 9 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். மாலை 6 மணி வரை தொடர்ந்து, 8 மணி நேரத்திற்கு பிறகு சோதனையை முடித்துக் கொண்டு சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

இதேபோல், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான “தனலட்சுமி செராமிக்ஸ்” என்ற டைல்ஸ் கடை மற்றும்
அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு உள்ளிட்ட இரண்டு இடங்களில் வியாழக்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள லக்கி டிரேடர்ஸ் டையிங் நிறுவன அலுவலகத்தில். நேற்று இரண்டு மணிக்கு தொடங்கிய சோதனை இரவிலும்  தொடர்ந்தது. அதிகாலை 2 மணியளவில் நிறைவு பெற்றது. இதேபோல் அமைச்சர் செந்தில்பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு அலுவலகம் உள்பட ஆறு இடங்களில்  நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.