ஐந்து மாத காலமாக நிறுத்தப்பட்டிருந்த ஏ.சி.பேருந்து சேவை, வரும் 1 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பேருந்து சேவை முடக்கப்பட்டிருந்தது. பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் படிப்படி யாக ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. ஆனால் ஏசி பேருந்துகள் இயக்குவதற்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தமிழகத்தில் ஏ.சி. பேருந்துகளை அக்டோபர் 1ஆம் தேதி முதல் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. மே 10-ம் தேதி நிறுத்தப்பட்ட ஏசி பேருந்து சேவை சுமார் 5 மாத காலத்துக்குப் பின் மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது. அதன்படி, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு 702 ஏ.சி. பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதையடுத்து ஏசி பேருந்துகளை தயார் செய்யும் பணியில் போக்குவரத்து பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.