முக்கியச் செய்திகள்இந்தியா

அந்த மனசு தான் சார்.. பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைபிடித்த இண்டிகோ ஊழியர்கள்!

நாகலாந்தில் உள்ள திமாபூர் விமான நிலையத்தில் பயணிகள் மழையில் நனையாமல் இருக்க விமான ஊழியர்கள் குடை பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நாகலாந்தில் உள்ள திமாபூர் விமான நிலையத்தில் பயணிகள் மழையில் நனையாமல் இருப்பதற்காக இண்டிகோ விமான ஊழியர்கள்,  அவர்களுக்கு குடை பிடித்தவாறு உள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  இவர்களின் இந்த செயல் மனநெகிழ்வை ஏற்படுத்துவதாக பயனர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  கடந்த 28 ஆம் தேதி இன்ஸ்டாவில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது வரை 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

க்ளோரியா சங்ராம் என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்து,  “நான் 28ஆம் தேதி டெல்லிக்கு சென்று கொண்டிருந்தபோது மழை பெய்தது.  நாங்கள் பேருந்து மற்றும் விமானத்திற்குள் நுழைந்த போது இந்த செயல் எனது இதயத்தையும்,  கண்களையும் கவர்ந்தது.  திமாபூர் விமான நிலைய ஊழியர்களின் இந்த நற்செயலுக்காக அவர்களை பாராட்டுகிறேன்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகள் மழையில் நனையாமல் இருப்பதற்காக அவர்களுக்கு குடை பிடித்து நிற்கும் இவர்களின் இந்த நற்செயல் மனதை கவர்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

டெல்லியில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை – டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர்!

G SaravanaKumar

விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’

Janani

லியோ படத்தின் புதிய அப்டேட்; ரசிகர்கள் உற்சாகம்

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading