“இந்திய விளையாட்டுக்கு நீங்கள் அளித்த பங்களிப்புக்கு நன்றி” – சச்சின் டெண்டுல்கர்!

பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெற்ற சாய்னா நேவாலுக்கு, சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

பேட்மிண்டனில் இருந்து ஓய்வுபெற்ற சாய்னா நேவாலுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்ன் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக சச்சின்ன் டெண்டுல்கர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சாய்னா, நீங்கள் இந்திய பேட்மிண்டனை உலக அரங்கிற்கு கொண்டு சென்றீர்கள். பதக்கங்களையும் தாண்டி உங்களது மிகப்பெரிய சாதனை ஒன்று உள்ளது. அது, நாடு முழுவதும் உள்ள இளம் வீரர், வீராங்கனைகளுக்கு உலக அளவிலான வெற்றி சாத்தியம் என்ற நம்பிக்கையை கொடுத்து உத்வேகம் அளித்தீர்கள்.

ஒவ்வொரு விளையாட்டு பயணமும் பரிணமித்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு கட்டம் முடிவடையும் போது, ​​மற்றொரு கட்டம் தொடங்குகிறது. உங்கள் அனுபவம், கண்ணோட்டம் மற்றும் விளையாட்டு மீதான அன்பு பலரை தொடர்ந்து வழிநடத்தும். இந்திய விளையாட்டுக்கு நீங்கள் அளித்த பங்களிப்புக்கு நன்றி. உங்களது தாக்கம் தலைமுறைகள் கடந்து உணரப்படும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.