தென்காசி இளம்பெண் கடத்தல் வழக்கில், காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த கிருத்திகாவை செங்கோட்டை நீதிமன்றத்தில் இன்று போலீஸார் ஆஜர்படுத்தினர்.
தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே உள்ள கொட்டாங்குளம் பகுதியை சேர்ந்த வினித்-கிருத்திகா காதல் தம்பதியினரை பிரித்து கிருத்திகா கடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில், தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விசாரணையின் போது ஆஜரான கிருத்திகாவை 2 நாட்கள் தென்காசி அருகே நன்னாகரம் பகுதியில் உள்ள காப்பகத்தில் வைத்து மனநல ஆலோசனை வழங்கி 2 நாட்களுக்குப் பிறகு ஒப்புதல் வாக்குமூலம் பெற உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில், 3 நாட்கள் தற்போது ஆகியுள்ள சூழலில், இன்று செங்கோட்டை
நீதிமன்ற நீதித்துறை நடுவர் சுனில்ராஜா முன்னிலையில் கிருத்திகாவை போலீசார்
ஆஜர்படுத்தினர். மதியம் 1 மணிக்கு நீதித்துறை நடுவர் சுனில்ராஜா முன்பு கிருத்திகாவை, சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் தலைமையிலான போலீசார் ஆஜர்படுத்தினர்.
தற்போது, நீதிமன்ற அறையில் வைத்து கிருத்திகாவிடம் செங்கோட்டை நீதித்துறை
நடுவர் சுனில்ராஜா ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்று வருகிறார். ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு முன்பாக நீதிமன்றத்தின் ஜன்னல்கள் மற்றும்
கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டு பாதுகாப்புக்காக சென்ற போலீசார்
வெளியேற்றப்பட்டனர்.
-ம.பவித்ரா