தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் தொடங்கிய தபால் வாக்கு, மறு எண்ணிக்கை திடீரென நிறுத்தப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021-ம் ஆண்டு நடைபெற்றது. தென்காசி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பழனி நாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாகவும், எனவே மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை சுமார் 10 மணிக்கு மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
அப்போது அதிமுக தரப்பில் தபால் வாக்குகளில் பதிவு செய்யப்பட்ட 13 சி விண்ணப்பத்தை சரிபார்க்க வேண்டுமென தெரிவித்த நிலையில் அதற்கு அதிகாரிகள் தரப்பு மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.வாக்கு சீட்டை மட்டுமே காட்டுவதாக தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்காலிகமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.