29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

டெம்போ கவிழ்ந்து விபத்து; 21 பேர் படுகாயம்

தாராபுரம் அருகே விவசாய வேலைக்கு சென்றவர்கள் டெம்போ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  21 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பெல்லம்பட்டி கிராமத்தில் நிலக்கடலை பறிக்கும் வேலைக்காக டெம்போவில் 19 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 21 பேர் விவசாய தொழிலுக்காக சென்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மானூர் பாளையம் பெல்லம்பட்டி சாலையில் உள்ள பரமன் என்பவரின் தோட்டத்திற்கு டெம்போ சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாரதவிதமாக திடீரெனெ வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் டெம்போவில் பயணம் செய்த 19 பெண்கள் உள்பட அனைவரும் பலத்த காயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 10க்கும் மேற்பட்டோருக்கு தலை பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 11 பேரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டு காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவர்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

மேலும் இச்சம்பவம் குறித்து குண்டடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading