பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூரில் ஆடி மாத திருவிழாவையொட்டி தீ வட்டத்துக்குள் காளிவேடத்தில் நடனம் ஆடும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
பெருமத்தூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி மாத பால்குட மற்றும் தீச்சட்டி திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான 3 நாட்கள் மாரியம்மன் வீதிஉலா நிகழ்வு தொடங்கியது. இதனையடுத்து முதல் நாளான நேற்று, தீ வட்டத்தில் காளி வேடம் அணிந்து நடனமாடும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் அனைவரும் கண்டு ரசித்தனர்.







