முக்கியச் செய்திகள் தமிழகம்

காளி வேடத்தில் தீ வட்டத்துக்குள் நடனம்

பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூரில் ஆடி மாத திருவிழாவையொட்டி தீ வட்டத்துக்குள் காளிவேடத்தில் நடனம் ஆடும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பெருமத்தூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி மாத பால்குட மற்றும் தீச்சட்டி திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான 3 நாட்கள் மாரியம்மன் வீதிஉலா நிகழ்வு தொடங்கியது. இதனையடுத்து முதல் நாளான நேற்று, தீ வட்டத்தில் காளி வேடம் அணிந்து நடனமாடும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் அனைவரும் கண்டு ரசித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram