சினிமா மோகத்தின் வேகம் குறையாத தமிழ்நாடு என்று நயன் – விக்கி திருமணம் குறித்து தமிழ்நாடு கள் இயக்கம் கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் சினிமா மோகம் ரொனால்டு ரீகனோடு நின்றுவிட்டது. ஆந்திராவில் என்.டிஆரோடு இது முடிந்துவிட்டது. கேரளாவிற்குள் நுழைய முடியவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறை அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என யாராலும் தடைபோட முடியாது. அதேநேரத்தில் நடிகர்களுக்கு மட்டுமே நாடாளும் தகுதி மற்றவர்களைவிடக் கூடுதலாக உள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நடிகை நயன்தாரா அறம் என்ற திரைப்படத்தில் நல்ல மாவட்ட ஆட்சியராக நடித்து தமிழ்நாட்டு மக்கள் மனதில் இடம்பெற்றுவிட்டார். இதைத்தொடர்ந்து, ஒரு படத்தில் நல்ல அரசியல்வாதியாக நடித்து, அதன் பின்பு ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து, தேர்தலைச் சந்தித்தால் வெற்றி பெறுவதும், முதலமைச்சர் ஆவதும் உறுதி. ஏனென்றால் தமிழர்கள் சினிமா மோகம் கொண்டவர்கள். நிழலை நிஜமென நமபக்கூடியவர்கள் என கேரள பத்திரிகை பதிவு செய்ததை பலரும் மறந்திருக்க முடியாது.
இந்நிலையில், ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் மந்திரங்கள் முழங்க நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணம் ஆடம்பரமாகவும், ஆர்ப்பாட்டமாகவும், அமர்க்களமாகவும் நடந்தேறியுள்ளது. திருமண நிகழ்ச்சி வீடியோ எடுக்கும் பணியை தனியார் ஓடிடி தளத்திடம் 10 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளனர். திருமண விருந்தில் 27 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. ஒரு நபருக்கு ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக் கட்டணம் ரூ. 3500.
இந்தத் திருமணம் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பப்பட்டது. பத்திரிகைகளில் படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. இந்தத் திருமணம் தமிழ்நாட்டில் இந்த வார பேசும் பொருளாகிப்போனது. நயன்தாரா – விக்னேஷ்சிவனம் திருமணம் குறித்த பதிவுகள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்தன. திருமணம் குறித்த பதிவுகள், இந்திய அளவில் முதல் இடத்தில் இருந்தன. ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையிலும் நயன்-விக்கி திருமணம் பல மணி நேரம் முதலிடத்தில் இருந்தது.
“பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்” – குறள் 196
பொருள்: பயனில்லாத சொற்களைப் பாராட்டி கொண்டாடுவோனை மனிதன் என்று சொல்லற்க, மனிதப் பதன் என்று சொல்லுக,. “தமிழர் என்றோர் இனமுன்டு, தனியே அதற்கோர் குணமுண்டு” எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா