இன்று முதல்வர் பழனிசாமி சிறு குறு நிறுவனங்களுக்கான புதிய தொழில் கொள்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துள்ளனர்.
மாநிலத்திலுள்ள சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களிடமிருந்து ஏற்றுமதியின் பங்கை 25 சதவிகிதம் அதிகரிக்கவும், தொழிற்பேட்டை உள்கட்டமைப்புக்கு கார்பஸ் 500 கோடி நிதி ஒதுக்கீடு என பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய இந்த நிறுவனங்களுக்கான புதிய தொழில் கொள்கை வரவேர்க்கத்தக்கதாக உள்ளதாகவும் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் 6 புதிய தொழிற்பேட்டையை உருவாக்க வழிவகுத்திருப்பது இந்த தொழில் கொள்கையின் சிறப்பம்சமாக கருதப்படுவதாகவும் டான்சியா தெரிவித்துள்ளது.