கொரோனா பரவல் அதிகரித்திருப்பதன் எதிரொலியாக, தமிழக – கேரள எல்லைப்பகுதியான குமுளி சோதனைச் சாவடியில் இ.பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைவரும் இ.பாஸ் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குமுளி பகுதியில் இன்று முதல் இ.பாஸ் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், கேரளாவிலிருந்து வரும் வாகனங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இ.பாஸ் இல்லாதவர்கள் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இதேபோன்று தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களுக்கும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.







