முக்கியச் செய்திகள்தமிழகம்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்த தமிழச்சி தங்கபாண்டியன்!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை,  தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.  

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 முதல் தொடங்கியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  திமுக சார்பில் தென்சென்னை தொகுதி வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் களமிறங்குகிறார்.

இந்த நிலையில்,  திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் இன்று (மார்ச்.23) காலை 11.30 மணியளவில் சந்தித்து ஆதரவு பெற்றார்.  அப்போது தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஸ்ரீவைகுண்டம் கோயில் படித்துறையில் அமலைச் செடிகள் அகற்றம்!

Web Editor

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்!

Web Editor

 “போலித்தனமில்லாமல் பல மணி நேரம் உரையாடினோம்” – இயக்குநர் ஆர்விஜி உடனான சந்திப்பு குறித்து அமிதாப் நெகிழ்ச்சி!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading