இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்டு வர தமிழக பாஜக முயற்சி- அண்ணாமலை

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்டு வர தமிழக பாஜக முயற்சி செய்து வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை…

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்டு வர தமிழக பாஜக முயற்சி செய்து வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக 28.11.2022 அன்று புறப்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சொல்லி 24 மீனவர்களையும் 5 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து மயிலட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது குறித்து உடனடியாக நமது மத்திய இணை அமைச்சர் முருகனுக்கும், மத்திய வெளியுறவு துறை அமைச்சர்  ஜெய்ஷங்கருக்கும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளின் விவரங்களை தெரிவித்து, நமது மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விரைந்து மீட்டு வர தமிழக பாஜகவின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இலங்கையில் உள்ள நமது இந்திய தூதரக அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட 24 மீனவர்களை பிணையில் விடுவிக்கவும், சிறைபிடிக்கப்பட்ட 5 விசைப்படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அறிகின்றோம்.

சிறைபிடிக்கப்பட்ட நம் மீனவர்கள் தாயகம் திரும்ப துரித நடவடிக்கை எடுத்துவரும் நமது மத்திய இணை அமைச்சர் முருகனுக்கும், மத்திய வெளியுறவு துறை அமைச்சர்  ஜெய்ஷங்கருக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக பாரதிய ஜனதா கட்சி மீனவர் சமுதாய மக்களுக்கு என்றும் அரணாக இருக்கும் என்று அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.