தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 507 ஆக குறைந்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 507 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 உயிரிழந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 794 பேர் குணமடைந்ததை அடுத்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரத்து 150 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34.48 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 133 ஆக குறைந்துள்ளது என்றும் கோவை மாவட்டத்தில் 76 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 58 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரியலூர், கள்ளக்குறிச்சி, தேனி திருப்பத்தூர், ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தென்காசி மாவட்டங்களில் தலா ஒருவருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.