ஆப்கானிஸ்தானில் காந்தகாரை தலிபான்கள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அரசுப்படைக்கு ஆதரவாக அமெரிக்கா தனது படைகளை நிறுத்தி வைத்திருந்தது. சுமார் 20 ஆண்டுகளாக அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் அனைத்து படைகளும் அங்கிருந்து வெளியேறிவிடும் என கூறப்பட்டுள்ளது.
இதனால், அங்கு நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. தலிபான்கள் தங்களது தாக்குதல்களை அதிகப்படுத்தி ஆப்கானிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரண்டு மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபுலை கைப்பற்ற அதி தீவிரமாக முன்னேறி வருகின்றன தலிபான் படைகள். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான காந்தகாரை தலிபான்கள் கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.







