இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா. பாண்டியனின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சமாதி மற்றும் திரு உருவப்படத்திற்கு குடும்பத்தினர், கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் முன்னாள் மாநில செயலாளருமான தா.பாண்டியன் கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று அவரது முதலாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள டேவிட் பண்ணையில் உள்ள அவரது சமாதி மற்றும் திரு உருவப்படத்திற்கு குடும்பத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் , அவர் பயின்ற பள்ளி மாணவ மாணவிகள் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் தா. பாண்டியன் நினைவாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.