டி 20 உலகக்கோப்பை ; இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே அபாரம்….!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தி வெற்றி பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. கொழும்பு மைதானத்தில் இன்று நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் இலங்கை -ஜிம்பாப்வே அணிகள் மோதன. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜும்பாப்வே அணி 19.3 ஓவர்களுக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியில் பிரையன் பென்னட் 48 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். இலங்கை அணி சார்பில் துஷான் ஹேமந்தா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

முன்னதாக காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்ற 37 ஆது லீக் போட்டியில் இத்தாலியுடன் மோதிய மேற்கிந்திய இந்திய தீவுகள் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது. இதில் அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 75 ரன்கள் குவித்தார். அடுத்து விளையாடிய இத்தாலி அணி 18 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அடுத்ததாக மாலை நடைபெற உள்ள போட்டியில் கனடா – ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.  சென்னையில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.