டி-20 உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் வாய்ப்பை இழப்பது இது முதன்முறையல்ல.
ஐபிஎல் முடிந்ததும் அப்படியே டி-20 உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்கியது இந்திய அணி. ஐபிஎல்-லில் அதிரடி காட்டிய இந்திய வீரர்கள், இந்த தொடரிலும் மிரட்டுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள், ரசிகர்கள். சில முன்னாள் வீரர்கள் இந்திய அணிதான் கோப்பை யை வெல்லும் அடித்து சொன்னார்கள் ஆருடம். ஆனால், நிலைமை தலைக்கிழாக மாறியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சந்தித்த முதல் போட்டியிலேயே பாகிஸ்தானிடம் பரிதாபமாகத் தோற்றது, டீம் இந்தியா. இந்த தோல்விக்கு சொல்லப்பட்ட காரணம் ,’பனி’. பனி காரணமாக போட்டி, அவங்களுக்கு சாதகமா போயிடுச்சு என்றார்கள். அடுத்தப் போட்டி நியூசிலாந்து அணியுடன். அந்தப் போட்டியிலும் யாரும் எதிர்பாராத நிலையில் அப்படியே, இந்திய அணி சரண்டர். அதற்கு கேப்டன் விராத் சொன்ன காரணம், ’நாங்க துணிச்சலா ஆடலை’! இந்த இரண்டு தோல்விகளால் அரையிறுதி வாய்ப்புப் பறிபோனது. பிறகு ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து போன்ற சிறிய அணிகளை துவம்சம் செய்து ’நாங்க இப்ப நல்லா ஆடினோம்’ என்றார்கள்.
இந்த வெற்றிகளை அடுத்து, ஆப்கன் அணி, நியூசிலாந்து அணியை வென்றால், ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பிருப்பதாகக் கணக்கு சொன்னார்கள். அந்த கணக்கும் பொய்த்துவிட்டது. இதனால், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறி விட்டது. நமிபியா அணியுடன் இன்று நடக்கும் சம்பிரதாய போட்டியிம் ஆடும் இந்திய அணி, அதிரடியாக ரன்களை குவிக்கலாம். நாங்க ஒன்னும் சாதாரண அணியல்ல என்பதை நிரூபிக்க, புரட்டி எடுக்கலாம். எப்படியோ, அரையிறுதி வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்டது இந்திய அணி.
இப்படி அரையிறுதிக்கு முன்னேறாமல் இந்திய அணி வெளியேறுவது, இது முதன்முறையல்ல. இது நான்காவது முறை. ஏற்கனவே, 2009, 2010, 2012-ஆம் ஆண்டுகளில் நடந்த போட்டிகளிலும் அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறது. கேப்டனாக விராத் கோலிக்கு இன்று நடக்கும் போட்டி கடைசி என்பதால், அவர் கொஞ்சம் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பாக்கலாம்.