பூரண குணமடைந்தார் நடிகர் டி.ராஜேந்தர்

நடிகர் சிலம்பரசன் தந்தையும், பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார். தற்போது சிகிச்சை முடிந்த நிலையில், அவர் பூரணமாக குணமடைந்துள்ளார்.  சில வாரங்களுக்கு…

நடிகர் சிலம்பரசன் தந்தையும், பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார். தற்போது சிகிச்சை முடிந்த நிலையில், அவர் பூரணமாக குணமடைந்துள்ளார். 

சில வாரங்களுக்கு முன் சென்னையில் டி.ராஜேந்தருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், டி.ராஜேந்தர் அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார். நடிகர் சிலம்பரசன் தன்னுடைய பணிகளை நிறுத்தி விட்டு, தன் தந்தையின் மேல் சிகிச்சைகான அனைத்து பணிகளையும் முன்னின்று செய்தார்.

அமெரிக்கா மருத்துவமனையில் அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது முழுமையாக டி.ராஜேந்தர் குணமடைந்துள்ளார். மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியால், அங்கேயே ஒரு மாதம் தங்கலாம் என குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதுவரையிலும் உடனிருந்து, அனைத்து பணிகளையும் முன்னின்று கவனித்துகொண்ட நடிகர் சிலம்பரசன், தன் தந்தை ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வெடுப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு, தற்போது படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பியுள்ளார். உடல்நிலை குணமடைந்த நிலையில், தற்போது முழு ஓய்வெடுத்து வருகிறார் டி.ராஜேந்தர். ஒரு மாதம் கழித்து சென்னை திரும்ப உள்ளார்.

 

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.