அந்தமான் நிக்கோபாரில் திடீர் நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபாரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில், அந்தமான் தீவுகள் உள்ளன. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம்…

அந்தமான் நிக்கோபாரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில், அந்தமான் தீவுகள் உள்ளன. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்நிலையில், அந்தமான் நிக்கோபார் அருகே 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. போர்ட் பிளேரிலிருந்து தென் கிழக்கு திசையில் 193 கிமீ தொலைவில் பிற்பகல் 2.06 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அண்மைச் செய்தி: ‘பிரசவத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டியவை பொருட்கள் என்னென்ன?’

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் கடற்பகுதியில் பதிவானதால் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

https://twitter.com/earthquakesApp/status/1543898486332018688

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.