அந்தமான் நிக்கோபாரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில், அந்தமான் தீவுகள் உள்ளன. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்நிலையில், அந்தமான் நிக்கோபார் அருகே 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. போர்ட் பிளேரிலிருந்து தென் கிழக்கு திசையில் 193 கிமீ தொலைவில் பிற்பகல் 2.06 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அண்மைச் செய்தி: ‘பிரசவத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டியவை பொருட்கள் என்னென்ன?’
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் கடற்பகுதியில் பதிவானதால் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
https://twitter.com/earthquakesApp/status/1543898486332018688








